முல்லைத்தீவு மாவடடத்தில் ஸ்ரீ சுப்ரமணியவித்தியாசாலை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் ஆகக்கூடுதலான மாணவர்கள் உதவு தொகை பெறவும் பாடசாலைகளை தெரிவு செய்யவும் தகுதி பெற்றுள்ளது.
46 மாணவர்கள்பாடசாலையை தெரிவு செய்யவும் உதவு தொகை பெறவும் தகுதியுடையோர்,100 புள்ளிகளுக்கு மேல் - 107 மாணவர்களும், 70 புள்ளிகளுக்கு மேல் - 117 மாணவர்களும் சித்தியடைந்துள்ளனர். கூடவே முல்லைத்தீவு மாவட்டத்தின் ஆகக்கூடுதலான புள்ளியான 196/200 பெற்று முரளிதரன் அஸ்விகன் சாதனை படைத்துள்ளது.
பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் மகாஜனக் கல்லூரி மாணவி சுபாஸ்கரன் ஜனுஸ்கா 198 புள்ளிகளுடன் வடக்கு மாகாணத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.
அத்துடன் யாழ்ப்பாணம் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் சந்திரகுமார் ஆர்வலன் மற்றும் கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் மகிசன் இருவரும் தலா 195 புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.
அத்துடன் மகாஜனக் கல்லூரியில் இருந்து 36 பேர் சித்திபெற்றுள்ளனர். வயாவிளான் சிறிவேலுப்பிள்ளை வித்தியாலயத்தில் இருந்து தோற்றிய 12 மாணவர்கள் சித்தியடைந்தனர்.
வவுனியா மாவட்டத்தில் இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவி அஸ்வினியா ஜெயந்தன் 196 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளார்.